சென்னையில் பள்ளி வளாகத்தில் வேன் மோதி உயிரிழந்த 2ஆம் வகுப்பு மாணவனின் உடலுக்கு பெற்றோர்கள் கண்ணீர் மல்க இறுதிச் சடங்கு.!

சென்னை ஆழ்வார்திருநகரில் பள்ளி வளாகத்தில் வேன் மோதி உயிரிழந்த 2ஆம் வகுப்பு மாணவனின் இறுதிச் சடங்கு பெற்றோரின் கண்ணீர் மல்க நடைபெற்றது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்த தீக்சித் என்ற மாணவன், வேன் மோதி உயிரிழந்த நிலையில், அவனது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், வளசரவாக்கத்திலுள்ள தேவாலயத்திற்கு தீக்சித்தின் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், ஆழ்வார்திருநகர் பிருந்தாவனம் கல்லறையில் மாணவன் தீக்சித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் துக்கம் தாளாமல் கதறி அழுதனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.