மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: பலி 20| Dinamalar

மெக்சிகோ சிட்டி:மெக்சிகோவில் ரகசியமாக சேவல் சண்டை நடந்த இடத்தில் ஒரு தரப்பினர் மீது மற்றொரு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட 20 பேர் பலியாகினர்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மைக்கோகன் மாகாண சுற்றுப் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குழுவினர் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தரப்பினர் ரகசியமாக சேவல் சண்டை நடத்தி உள்ளனர்.

அப்போது அடையாளம் தெரியாத வகையில் உடை அணிந்த ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது. அவர்கள் சேவல் சண்டை நடத்திய தரப்பினர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று பெண்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்; 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது திட்டமிட்டு நடந்த படுகொலை என கூறிய போலீசார் இதற்கு காரணமானவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.