குரூப்-4 தேர்வுகள் ஜூலை 24ல் நடைபெறும் என அறிவிப்பு – தேர்வாணையம்

குரூப்-4 தேர்வுகள் ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அத்தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், மொத்தம் 7 ஆயிரத்து 382 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

3 மணி நேரம் நடைபெறும் தேர்வில் மொத்தம் முந்நூறு மதிப்பெண்களுக்கு இருநூறு கேள்விகள் கேட்கப்படும் என்றும் தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக குரூப்-4 தேர்வுகள் நடைபெறாத நிலையில், அதனால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்படுவதாக அவர் கூறினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.