ஜம்மு கஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு கஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரின் ரெய்னாவாரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் முன்னாள் பத்திரிகையாளர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் சேர்ந்த அவன், பல்வேறு பயங்கரவாத குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.