ரூ.40 லட்சம் லஞ்சப் பணத்துடன் காரில் சென்ற ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்.. மடக்கி பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்..!

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சரவணக்குமார் காரில் இருந்து கணக்கில் வராத 40 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக பணியாற்றி வரும் சரவணகுமார், சமையலர் பணியிடங்களை வழங்குவதற்காக பெறப்பட்ட லஞ்சம் பணம் 40 லட்சம் ரூபாயுடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் செல்வதாக திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அவரது காரை போலீசார் பின்தொடர்ந்து வந்த போது முடியாததால், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் சரவணக்குமார் சென்ற காரை விழுப்புரம் அடுத்த கெடிலம் பகுதியில் மடக்கிப் பிடித்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், 40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்ததோடு சரவணக்குமார் மற்றும் அவரது கார் ஓட்டுநர் மணியை விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.