அறக்கட்டளை துவக்க விழா| Dinamalar

புதுச்சேரி-வழக்கறிஞர் பரசுராமன் அறக்கட்டளை துவக்க விழாவையொட்டி, மாணவ -மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.மறைந்த வழக்கறிஞர் பரசுராமன் பெயரில், புதுச்சேரி காமராஜர் நகர், தமிழ்செல்வி வீதி எண், 5 என்ற முகவரியில் அறக்கட்டளை நிறுவப்பட்டு உள்ளது.இதன் துவக்க விழா, கடந்த 29ம் தேதி நடைபெற்றது. அதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை, ஸ்வச் பாரத் துப்புரவு பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியை காந்திமதி கூறுகையில் ‘சமூதாயத்தில் நலிவுற்ற நிலையில் உள்ளவர்கள், கிராமப்புற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி, துறைசார் ஆலோசனை, சட்ட வழிகாட்டுதல், சமூக நற்பணிகள், அறக்கட்டளை மூலமாக மேற்கொள்ளப்படும்’ என்றார்.விழா ஏற்பாடுகளை அமரன், காமராஜ் நகர் ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.