ரஜினி செய்த காரியம்..குவியும் பாராட்டுக்கள்..!

நடிகர் ரஜினியை திரையில் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் அவரை திரைக்கு பின்னாலும் ரசித்துக்கொண்டிருக்கின்றனர். என்னதான் படத்தில் படு மாஸாக வந்தாலும் நிஜத்தில் மிகவும் எளிமையாக இருப்பார். அனைவரிடமும் பண்பாகவும் பாசமாகவும் நடந்துகொள்ளும் ரஜினியைப்பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ்க்கு
ரஜினி
செய்த உதவி பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. என்னவென்றால் சினிமாவில் நடன கலைஞராக வேண்டும் என்று போராடி கொண்டிருந்த லாரன்ஸ்க்கு ஆரம்பத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.

வலிமை படத்தை பார்த்த முதல்வர்…வினோத்திடம் விசாரணை நடந்த முடிவு..!

அதைத்தொடர்ந்து சூப்பர் சுப்பாராயனிடம்
லாரன்ஸ்
உதவியாளராக சேர்ந்தார். அவருக்கு சாப்பாடு பரிமாறுவது, அவருக்கு பணிவிடை செய்வது என வேலைபார்த்து வந்தார் லாரன்ஸ். இந்நிலையில் ஒருநாள் ரஜினியுடன் சூப்பர் சுப்பாராயன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது சுப்பர் சுப்பாராயனுக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தார் லாரன்ஸ். அப்பொழுது ரஜினியிடம் சூப்பர் சுப்பாராயன் இவர் நடனம் நன்றாக ஆடுவார் என லாரன்ஸை பற்றி கூறினார். உடனே ரஜினி அப்படியா அப்போ ஆடச்சொல்லுங்க பாப்போம் என்று கூறவே லாரன்ஸ் ஆடிக்காட்டினார். அவர் ஆடியதை அடுத்து ரஜினி நாளை என் வீட்டிற்கு வந்து என்னை பார் என்று லாரன்ஸிடம் கூறினார்.

அதையடுத்து லாரன்ஸ் ரஜினியின் இல்லத்திற்கு சென்றார். அப்போது ரஜினி நான் ஒரு பையனை அனுப்பிவைக்கின்றேன் அவர் மிகவும் நன்றாக நடனமாட கூடியவர் என கைப்பட ஒரு கடிதத்தை நடன சங்கத்தினருக்கு எழுதி லாரன்ஸிடம் கொடுத்தார் ரஜினி.

இதனை கண்ட லாரன்சுக்கு சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதையடுத்து ரஜினியிடம் ஆசி பெற்று பிரபுதேவாவிடம் நடன கலைஞராக சேர்ந்தார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்க கட்டிடம் சுற்றுலா தலமாக மாறும் – விஷால் பேச்சு!

அடுத்த செய்திBeast: மக்களை காப்பாற்ற போராடும் தளபதி.. ‘பீஸ்ட்’ சீக்ரெட்டை போட்டுடைத்த நெல்சன்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.