பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து இ மெயில்.. 3 பேர் கைது

பிரதமர் மோடியைக் கொலை மிரட்டல் விடுத்தும், ஜெய்ப்பூரில் 20 இடங்களில் குண்டுகள் வெடிக்கச் செய்யவும் மிரட்டல் விடுத்து அனுப்பப்பட்டுள்ள இமெயிலின் உண்மை தன்மை குறித்து விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

இது குறித்து தீவிரவாதத் தடுப்பு ஏஜன்சிகளுக்கு தேசிய புலனாய்வு முகமையின் உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை ஊடகங்கள் மூலம் கசிந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேரை தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்து மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 12 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள், மூன்று பேட்டரி கடிகாரங்கள், ஆறு பல்புகள், மூன்று கனெக்டர் ஓயர்கள், ஒரு ஜீப் ஆகியவற்றையும் தீவிரவாதிகளிடம் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.பல்வேறு இடங்களில் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.