புனிதமான திருமணம் யாஷிகாவிற்கு முட்டாள்கள் தினமா

நான் திருமணம் செய்ய இருக்கிறேன் என நேற்று கூறிய நடிகை யாஷிகா, இப்போது எனக்கு திருமண வாழ்த்து சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் (ஏப்., 1) என கூறியுள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கி உள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு சில படங்களில் நாயகியாக நடித்தார். கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி, தனது தோழியை பறிக்கொடுத்தவர். காலில் பலத்த அடிபட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது முழுமையாக குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். பழையபடி போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் பதில் அளித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று திடீரென தான் திருமணம் செய்ய போவதாக கூறினார். அதுப்பற்றி அவர் கூறுகையில், ‛‛நான் திருமணம் செய்ய இருக்கிறேன். என் பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இது செட்டிலாகும் நேரம். ஆனாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன். எப்போதும் உங்களை மகிழ்விப்பேன். காதல் செட் ஆகாது, இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். அனைவரின் ஆசீர்வாதம் தேவை'' என்றார்.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். பின்னர் சில மணிநேரங்களில் இது பொய் என அறிவித்தார். அவர் கூறுகையில், ‛‛எனக்கு திருமண வாழ்த்து சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை'' என்றார் யாஷிகா.

ஏப்., 1 நேற்று முட்டாள்கள் தினம் என்பதால் இப்படி அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்துள்ளார் யாஷிகா. ஆனால் இந்த விஷயம் யாரையும் ஈர்க்கவில்லை. ‛‛புனிதமான திருமணத்தை கூட இப்படி தான் முட்டாள்கள் தினம் கொண்டாடி விளையாடுவாரா யாஷிகா. அதிலும் வாழ்த்து சொல்பவர்களை முட்டாள்கள் என கூறுவாரா…'' என நெட்டிசன்கள் கடுமையாக வசை பாடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.