கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட உக்ரைனியர்கள்.. ரஷ்ய வீரர்கள் வெளியேறிய நகரங்களில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்..

ரஷ்ய படைகள் பின்வாங்கிய உக்ரைனிய நகரங்களில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டு கொல்லப்பட்ட உக்ரைனியர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புச்சா, ஹாஸ்டோமல், இர்பின் நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்நகரங்களை உக்ரைனிய வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

கை, கால்கள் கட்டப்பட்டு பின்னந்தலையில் சுட்டு கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் புதைகுழிகளில் இருந்ததாக அந்நாட்டு அதிபரின் உதவியாளர் நிக்கிஃபோரோவ் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.