பிரித்தானிய எண்ணெய் கிணறுகள் மேல் குவிந்த போராட்டக்காரர்கள்: அதிரடி கைது நடவடிக்கை!


பிரித்தானியாவில் எண்ணெய் கிணறுகளை 48 மணிநேரங்களாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த போராட்டக்காரர்களில் 83 நபர்களை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Extinction Rebellion மற்றும் Just Stop Oil என்ற ஆர்வலர்கள் குழுக்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் டிகார்பனைசேஷன் முயற்சிகளை அரசாங்கம் துரிதப் படுத்தக்கோரி பிரித்தானியாவின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் முன்பு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் குதித்தனர்.

இதில் சில போராட்டக்காரர்கள் எண்ணெய் கிணறுகள் மீது ஏறி போராட்டம் நடத்தவே அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

photo: REUTERS/John Sibley

இதனை தொடர்ந்து பிரித்தானியாவின் மூன்று பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 63 நபர்களை அந்த நாட்டு பொலிசார்கள் கைதி செய்துள்ளனர், மேலும் இந்த போராட்டத்திற்கு காரணமாக இருந்த 20 நபர்களையும் பிரித்தானிய பொலிசார் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து உதவி தலைமை பொலிசார் ரேச்சல் நோலன் தெரிவிக்கையில், போராட்டக்காரர்களின் பிரச்சனைகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் முடிவுக்கு கொண்டுவர பிரித்தானிய பொலிசார் விதிவிலக்கான மற்றும் சவாலான சூழலில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ள நபர்கள் மீது பல்வேறு குற்றங்களின் சந்தேகத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வரும் ஏப்ரல் 9 திகதி முதல் லண்டனில் தினந்தோறும் போராட்டங்கள் நடத்தப்பட்டு பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்கப்படும் என Extinction Rebellion போராட்ட குழு தெரிவித்துள்ளது. 

ரஷ்ய படைகளுக்கு விஷ கேக்குகளை விருந்தளித்த உக்ரைன் மக்கள்: 500 வீரர்கள் கவலைக்கிடம்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.