முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. ஐவர் கைது..!

முன்விரோதம் காரணமாக கொலை செய்த ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (25). இரண்டு நாட்களுக்கு முன் இவர் வீட்டு மாடியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொலை செய்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கொலையில் ஈடுபட்ட மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (23), சுரேந்தர் (20), சதஷ் (20), சுதாகர் (20), ரைசுல் இஸ்லாமுல் அன்சாரி (21), ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், தேவேந்திரனுக்கும் சுரேந்திரனுக்கும் இடையே  தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது ஏற்பட்ட சண்டையில் தேவிந்தரன் தங்களை தாக்கியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.