எரிபொருள் விலை கட்டுக்குள் வரும்:| Dinamalar

மங்களூரு : ”பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம் அல்ல. விரைவில் விலை கட்டுக்குள் வரும்,” என்று பா.ஜ.,வின் முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.இது குறித்து மங்களூரில் அவர் கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை.

இதற்கு முந்தைய அரசு தான் காரணம்.முந்தைய அரசின் தவறான கொள்கையால் எண்ணெய் நிறுவனங்கள் தன் இஷ்டத்துக்கு விலையை நிர்ணயித்து கொள்கின்றன.ரஷ்யா – உக்ரைன் போரும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. ரஷ்யாவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ற, இறக்கம் உள்ளன.எரிபொருள் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் விலை கட்டுக்குள் வந்து விடும்.முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு இன்னொருவர் மீது குற்றம் சாட்டுவதுதான் வேலை. இதற்கு முன் காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையா, சிவகுமார், கார்கே மீது குற்றச்சாட்டு கூறி வந்தார். தற்போது பா.ஜ., மீது கூறி வருகிறார். கர்நாடகாவில் ம.ஜ.த., ஒரு முடிந்து போன அத்தியாயம்.அந்த கட்சியில் நடக்கும் விஷயங்களை மக்கள் கவனித்தபடி இருக்கின்றனர். குமாரசாமி தன்னிலை மறந்து பேசி வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.