கோவாக்ஸின் தடுப்பு மருந்தில் உள்ள குறைகளை போக்க உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்| Dinamalar

ஐதராபாத்: கோவாக்ஸின் தடுப்பு மருந்தில் உள்ள குறைகளை போக்க உலக சுகாதார அமைப்பு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் வலியுறுத்தி உள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தான கோவாக்ஸின் தடுப்பு மருந்து குறித்து மூன்று குறைகளை சுட்டிக் காட்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் முன்னதாக ஐதராபாத்துக்கு வருகை தந்தனர். கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் நிறை குறைகளை இந்த விஞ்ஞானிகள் ஆராய்ந்து இந்திய மருந்து தயாரிப்பு அமைப்பிடம் இது குறித்து அறிக்கையை சமர்ப்பித்தனர்.

கோவாக்ஸின் தடுப்பு மருந்தில் ஏற்பட்டுள்ள குறைகள் காரணமாக உலக நாடுகளுக்கு இந்த தடுப்பு மருந்தை அளிக்க தற்காலிகமாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் தடை விதித்துள்ளனர். கடந்த மார்ச் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்த தடுப்பு மருந்தை உலக சுகாதார விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டதில் அவசரத் தேவைக்கு இதனை உலகநாடுகள் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்ட பின்னரே இந்த தடுப்பு மருந்துக்கு சர்வதேச பயன்பாட்டு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.