சென்னையில் இரு வாரங்களில் 12வது முறையாக பெட்ரோல் விலை உயர்வு.. பொதுமக்கள் கடும் அவதி

இரு வாரங்களில் 12வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 38 காசுகள் உயர்ந்து லிட்டர் 109 ரூபாய் 34 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் டீசலும் லிட்டருக்கு 38 காசுகள் விலை அதிகரித்து லிட்டர் 99 ரூபாய் 42 காசுகளுக்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக நடுத்தர குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.