சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து விபத்து.. தம்பதி பரிதாப பலி..!

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் டயர் வெடித்த விபத்தில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சிறுவரூப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மனைவியுடன் மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, ஆதிரவாக்கம் பகுதியில் அவர்கள் சென்றபோது, ஏதிரே கார் ஒன்று வந்தது.

அந்த காரின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்தது. அப்போது, இருசக்கர வாகனத்தின் பின் பக்கம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் நொறுங்கியதில் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் வந்தவர்களுக்கு காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.