தனியார் கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதல்.. இரு தரப்பையும் சமாளிக்க முடியாமல் திணறிய ஆசிரியர்கள்

கன்னியாகுமரி அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அஞ்சுகிராமம் அருகேயுள்ள கேப் தொழில்நுட்பக் கல்லூரியில் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பயின்று வருகின்றனர்.

இவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழுவுக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழுவுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் அண்மையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலும் அதில் ஒரு மாணவரை நான்கைந்து பேர் கீழே தள்ளி தாக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.