தனுஷுக்குனே கெளம்பி வருவாங்களோ?: 'அவர்' வில்லங்க பார்ட்டியாச்சே

தனுஷ்
தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது தவிர்த்து
அருண் மாதேஸ்வரன்
இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் நடிகர் விநாயகனை சந்தித்து பேசியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram A post shared by அருண் Matheswaran (@thatswatitis)
தான் தனுஷை வைத்து எடுக்கும் படத்தில் விநாயகனை தான் வில்லனாக நடிக்க வைக்கிறார் அருண் மாதேஸ்வரன் என்று கூறப்படுகிறது. முன்னதாக மரியான் படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்தார்
விநாயகன்
.

அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விநாயகன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவர் கூறியதாவது,

அது என்ன மீ டு?. எனக்கு தெரியாது. அது பெண்ணை பொறுத்தது?. நான் இதுவரை 10 பெண்களுடன் உறவு கொண்டிருக்கிறேன். என்னுடன் உறவு கொள்ள விருப்பமா என்று அந்த 10 பேரிடமும் கேட்டேன். நான் இனியும் கேட்பேன். அதை தான் நீங்கள் மீ டு என்கிறீர்களா என்றார்.

பின்னர் தன் பேச்சுக்காக பத்திரியாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் தனுஷ் படத்தில் விநாயகன் நடிக்கப் போகிறாரா என்று ரசிகர்கள் லைட்டாக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அம்மாடி, ஏ.ஆர். ரஹ்மான் மகனின் டி சர்ட் இம்புட்டு விலையா!!!

அடுத்த செய்திமீண்டும் ஆரம்பம் ஆகும் மார்க் ஆண்டனி…! படத்தின் அப்டேட் வெளியிடு…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.