விருதுநகர் : தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..!

தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

விருதுநகர் மாவட்டம் படந்தால் பகுதியில் குணசேகரன் என்பவருக்கு தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல தொழிலாளர்கள் தீப்பற்றி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தீக்குச்சி அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது பணியாளர்களுடன் யாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் அறையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.