விவசாயிகளுக்கு சலுகை… கோவை விமான நிலையத்திற்கு புதிய அந்தஸ்து!

கிருஷி உதான் திட்டம் ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச மற்றும் தேசிய வழித்தடங்களில் விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்வதில் விவசாயிகளுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்டது. க்ரிஷி உதான் திட்டம் 2.0 அக்டோபர் 2021-ல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தற்போதுள்ள ஏற்பாடுகளை மேம்படுத்துகிறது, முக்கியமாக மலைப்பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் இருந்து அழிந்துபோகும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் கவனம் செலுத்துகிறது.

அகர்தலா, அகட்டி, பாரபானி, டேராடூன், திப்ருகார், திமாபூர், கக்கல், இம்பால், ஜம்மு, ஜோர்ஹாட், குலு (புந்தர்), லே, லெங்புய், லிலாபரி, பாக்யோங், பந்த்நகர், பித்தோராகர், போர்ட் பிளேர், ராய்ப்பூர், ராஞ்சி, ரூப்சி, சிம்லா, சில்சார், ஸ்ரீநகர் மற்றும் டெசு போன்ற வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள 25 விமான நிலையங்களில், மலைப்பகுதி மற்றும் பழங்குடியினர் பகுதியில் முதன்மையாக இந்தத் திட்டம் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், கிருஷி உதான் திட்டத்தின் கீழ் 53 விமான நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் 28 விமான நிலையங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, அடம்பூர் (ஜலந்தர்), ஆக்ரா, அமிர்தசரஸ், பாக்டோக்ரா, பரேலி, புஜ், சண்டிகர், கோயம்புத்தூர், கோவா, கோரக்பூர், ஹிண்டன், இந்தூர், ஜெய்சல்மர், ஜாம்நகர், ஜோத்பூர், கான்பூர் (சகேரி), கொல்கத்தா, நாசிக் , பதான்கோட், பாட்னா, பிரயாக்ராஜ், புனே, ராஜ்கோட், தேஜ்பூர், திருச்சி, திருவனந்தபுரம், வாரணாசி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

கிருஷி உதான் திட்டம் என்பது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மீன்வளத் துறை, உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம், வர்த்தகத் துறை, பழங்குடியினர் அமைச்சகம் ஆகிய 8 அமைச்சகங்கள்/துறைகளின் விவகாரங்களை ஒன்றிணைக்கும் திட்டமாகும். வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் வேளாண் உற்பத்திப் பொருட்களின் போக்குவரத்திற்கான தளவாடங்களை வலுப்படுத்த, தற்போதுள்ள திட்டங்களைப் பயன்படுத்துகிறது. இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லை.

இத்திட்டத்தின் கீழ், தரையிறக்கம், பார்க்கிங், டெர்மினல் நேவிகேஷனல் லேண்டிங் கட்டணங்கள் (டிஎன்எல்சி), மற்றும் இந்திய சரக்குகள் மற்றும் சரக்குகளுக்கான பயணிகளுக்கான (பி2சி) வழித்தட வசதிக் கட்டணங்களை (ஆர்என்எஃப்சி) முழுவதுமாக தள்ளுபடி செய்வதன் மூலம் விமானப் போக்குவரத்து மூலம் விவசாய உற்பத்தியை எளிதாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் செsய்யப்படும். இந்திய விமான நிலைய ஆணையத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்கள், முதன்மையாக வடகிழக்கு பிராந்தியத்தின் மலைப்பகுதி மற்றும் பழங்குடியினர் பகுதியை மையமாகக் கொsண்ட சுமார் 25 விமான நிலையங்கள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள 28 விமான நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய விமான நிலைய ஆணையம் 2020-ம் நிதியாண்டில் 84 ஆயிரத்து 42 மெட்ரிக் டன்கள் கையாளப்பட்ட நிலையில், 2021-22 நிதியாண்டில் (28 பிப்ரவரி 2022 வரை) மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 479 மெட்ரிக் டன்கள் அழிந்துபோகக்கூடிய சரக்குகளை (சர்வதேச + உள்நாட்டு) கையாளப்பட்டுள்ளன. கிருஷி உதான் என்ற தற்போதைய திட்டம் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

விவசாயப் பொருட்களை எடுத்துச் செல்வதில், விவசாயிகளுக்கு சலுகை வழங்கும் இந்த கிருஷி உதான் திட்டத்தில் கோவை, திருச்சி விமான நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், கோவை, திருச்சி விமான நிலையத்திற்கு புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.