அரசு குளிர்சாதனப் பேருந்தில் பயங்கரத் தீ விபத்து.. ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது

டெல்லியில், அரசு குளிர்சாதனப் பேருந்தில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த கடைகளுக்குப் பரவியதில் 3 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

மஹிபால்பூர் பகுதி வழியாக சென்ற காலி குளிர்சாதனப் பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

காற்று வேகமாக வீசியதால் அருகில் இருந்த கடைகளுக்கும் தீ பரவியது. 9 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள், ஏசி எந்திரங்கள் விற்கும் 3 கடைகள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவமாகத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.