'கலகலப்பு' பட பாணியில் ஜன்னலில் சிக்கிய திருடன் – வீடியோ உள்ளே!

ஆந்திர மாநிலத்தில் கொள்ளை அடிக்கச் சென்று, “கலகலப்பு” பட பாணியில் ஜன்னலில் சிக்கிக் கொண்ட திருடனை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் எல்லையம்மன். இந்தக் கோவிலில் உள்ள உண்டியலில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்க நேற்று வந்த திருடன், கோவில் ஜன்னல் கம்பிகளை நீக்கி விட்டு கோவிலுக்குள் சென்று உள்ளார்.

பின்னர், கருவறையில் இருந்த அம்மன் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு ஜன்னல் வழியே வெளியே வர முயற்சித்து உள்ளார். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. நீண்ட நேரம் வெளியே வர போராடியதால் கலைப்பு ஏற்பட்டு அப்படியே தூங்கி உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஜன்னலில் சிக்கி இருந்த திருடனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஜன்னலில் சிக்கியிருந்த கொள்ளையனை மீட்க முயன்றனர்.

ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜன்னலில் சிக்கியிருந்த திருடனை மீட்டனர். அவரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய “கலகலப்பு” பட பாணியில் திருடன் ஜன்னல் வளையத்திற்குள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்திவாக்கு வங்கி அரசியலால் மக்களுக்கு ஆபத்து.. நிரூபித்திருக்கிறோம்.. மோடி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.