கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க நிதி ஒதுக்க திமுக மாநிலங்களவை எம்.பி. ராஜேஷ் குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை

கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்க மத்திய அரசு விரைவாக நிதி ஒதுக்க வேண்டும் என ராஜ்ய சபாவில் திமுக எம்.பி.,ராஜேஷ் குமார் கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் 2-ஆம் கட்ட நகரமாக விளங்கும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு ஏற்கனவே 6 ஆயிரத்து 670 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் , திட்டத்தை தொடங்க மத்திய அரசு விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கோவையை போல மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய தமிழகத்தின் 2-ஆம் கட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் எம்.பி.,ராஜேஷ் குமார் கோரிக்கை விடுத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.