உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் யோகா நிகழ்ச்சி.!

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா பெருவிழா கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது.

காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை டெல்லியில் உள்ள செங்கோட்டையில், ஆகஸ்ட் 15 பூங்கா பின்னணியில், யோகா பெருவிழா எனும் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமை விருந்தினராக பங்கேற்பார் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெல்லியில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்கள், பிரபல விளையாட்டு ஆளுமைகள், யோகாசன குருக்கள் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.