பாண்டிச்சேரி முதல்வரால் தொடங்கப்பட்ட, ‘சூரியனும் சூரியகாந்தியும்’!

பார்த்திபன், தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை தொடர்ந்து,

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் இயக்குனர் ஏ.எல்.ராஜா தயாரித்து இயக்கியுள்ள புதிய படம், ‘சூரியனும் சூரியகாந்தியும்’. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். இணைத் தயாரிப்பு, டெய்லி குருஜி.

அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதை நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில், ரிதி உமையாள் நாயகியாக தோன்றுகிறார்.

சந்தான பாரதி, செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், மங்களநாத குருக்கள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்தித்தில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு: திருவாரூர் ராஜா. ஆர்.எஸ்.ரவி பிரியன் இசை அமைக்க, கவிஞர் செங்கதிர் வாணன் பாடல்களை எழுத, வேல் முருகன், முகேஷ், நேகா ஆகியோர் பாடியுள்ளனர்.

எடிட்டிங்: வீரசெந்தில்ராஜ் , நடன இயக்கம்: , மஸ்தான்.

சண்டைப் பயிற்சி; ஸ்பீடு மோகன், கலை: ஜெயசீலன், ஸ்டில்ஸ்: சாய் சக்தி, பிஆர்ஓ: கோவிந்தராஜ்.

படம் குறித்து இயக்குனர் ஏ.எல்.ராஜா கூறும்போது, “மகாகவி பாரதியின், ‘சாதிகள் இல்லையடி பாப்பா,

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்’ என்ற பாடல் தான் கதையின் மையக் கருத்து. சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூப்போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், காதலுக்குள் சாதி பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதும் தான் கதை” என்றார்.

பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, படத்தை துவங்கிவைக்க, நான்கு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகளுடன், மதுரை, தேனீ, திண்டுக்கல், மைலம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில், முப்பத்தைந்து நாட்களில் படப்பிடிப்பு நிறைவுப் பெற்றது. தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.