'மிஸ்டர் லோக்கல்' பட பஞ்சாயத்து: சிவகார்த்திகேயனிடம் நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

சிவகார்த்திகேயன்
நடிப்பில் அண்மையில் வெளியான ‘டாக்டர்’ படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றது. அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘
டான்
‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.

இந்நிலையில் அண்மையில் ‘
மிஸ்டர் லோக்கல்
‘ படத்தில் நடிக்க தனக்கு ரூ.15 கோடி சம்பளம் என நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால் ஞானவேல் ராஜா தனக்கு ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும் ரூ 4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சிவகார்த்திகேயன்.

மேலும், தனக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை வழங்கும் வரை ஞானவேல் ராஜா சிம்பு மற்றும் விக்ரம் படங்களை தயாரிக்கக்கூடாது என தனது மனுவில் குறிப்பிட்டுருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மீண்டும் உண்மை கதையில் சூர்யா: சுதா கொங்கரா வெளியிட்ட மாஸ் அப்டேட்..!

சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது என்றும் மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில், மற்றொரு மனு தாக்கல் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பின்னர் இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணை வரும் 13ஆம் தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரஜினியும், ராகவா லாரன்ஸும்; குட்டி Flashback!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.