அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடக்கம்

ஜம்மு: ஜம்மு, காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோயிலுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரை நடப்பது வழக்கம். கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக புனித யாத்திரை நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை வரும் ஜூன் 30ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைகிறது. 43 நாட்கள் நடக்கும் அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.  இணையதளம் மூலமும், அமர்நாத் கோயில் போர்டின் 566 கிளைகள் மூலமும் முன்பதிவு செய்யலாம். 13  வயதுக்கும் குறைவான சிறுவர்கள், 75 வயதுக்கும் அதிமான முதியவர்களுக்கு அனுமதி இல்லை. 2 ஆண்டுக்கு பின் நடைபெற உள்ள புனித யாத்திரையில் 8 லட்சம் பக்தர்கள் அமர்நாத் குகை கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்காக குடிநீர், தங்கும் இடம், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யும் பணி துவங்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.