ஆந்திர அமைச்சவை விரிவாக்கம் – நடிகை ரோஜாவுக்கு எந்த துறை?

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவையில், நடிகை ரோஜாவுக்கு, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் தெரிவித்திருந்தார்.

அதன்படி அவரது தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ளன. இதை அடுத்து அண்மையில் ஆந்திர மாநில அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதங்களை அவர்கள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் வழங்கினர்.

ஆந்திர மாநில புதிய அமைச்சரவையில், ஏற்கனவே அமைச்சராக இருந்த 11 பேருக்கு மீண்டும் இடம் வழங்கப்பட்டது. நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான
ரோஜா
உட்பட 14 புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது,
நடிகை ரோஜா
, குடிதேவா அமர்நாத், புடிமிட்டியாலா நாயுடு, டேடிசெட்டி ராஜா, ராஜன்னா டோராபீடிகா, தர்மனா பிரசாதராவ், ஜோகிரமேஷ் உட்பட 25 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பிஸ்வா பூ‌ஷன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, ராஜன்னா டோராபீடிகா, புடிமிட்டியாலா நாயுடு, கோட்டு சத்தியநாராயணா, கே.நாராயண சாமி, அமத்பாஷா ஷேக் பேப்பாரி உள்ளிட்ட ஐந்து பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். நடிகை ரோஜாவுக்கு, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.