ஓடிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி… பதைபதைக்கும் வீடியோ

ஈரோட்டில் தனியார் கல்லூரி பேருந்தின் கதவு சரியாக மூடப்படாத நிலையில், பேருந்து வேகமாக வளைவு ஒன்றில் திரும்பும்போது கதவு திறந்துகொண்டு படிக்கட்டு அருகே நின்றிருந்த மாணவி, சாலையில் விழுந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தப் பேருந்து கடந்த 4ஆம் தேதி வழக்கம்போல் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு கல்லூரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

நாடார் மேடு அருகே ஹர்சினி என்ற மாணவி பேருந்தில் ஏறியுள்ளார். கதவை சரியாக மூடாமல், படிக்கட்டில் நின்று கொண்டே சென்ற ஹர்சினி சாஸ்திரி நகர் வளைவில் பேருந்து வேகமாகத் திரும்பும்போது நிலைதடுமாறி கதவின் மீது சரிய, சரியாக மூடப்படாத கதவு திறந்துகொண்டு சாலையில் விழுந்தார்.

தலையில் அடிபட்ட ஹர்சினி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.