பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவருக்கு ஹாஸ்டல் | Dinamalar

மைசூரு : ”பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாணவர்களுக்கு உதவும் நோக்கில், தீன் தயாள் உபாத்யாய பெயரில், ஒவ்வொரு நகரங்களிலும் ஹாஸ்டல் திறக்கப்படும்,” என பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.மைசூரில் அவர் கூறியதாவது:

மாணவர்கள் கல்வி பெறுவதற்காக, கிராமங்களிலிருந்து, நகரங்களுக்கு வருகின்றனர். இது போன்ற மாணவர்களுக்கு, உணவு, தங்கும் வசதியுடன் கூடிய ஹாஸ்டல் திறக்கபடும்.தற்போது மாநிலத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாஸ்டல் வேண்டுமென, கோரிக்கை விடுத்துஉள்ளனர். இதன்படி தீன் தயாள் உபாத்யாய பெயரில், ஒவ்வொரு நகரங்களிலும் ஹாஸ்டல் திறக்கப்படும்.இவ்வாறு இவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.