சென்னையில் குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த லாரி டிரைவரின் சிசிடிவி காட்சிகள்.!

சென்னை அடுத்த தாம்பரத்தில் குடும்ப தகராறு காரணமாக லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அச்சம்பவம் தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருநீர்மலை ரோடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான சுரேஷ், பணி முடிந்து மதுபோதையில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதில், பெட்ரோலை தன் மீது ஊற்றி சுரேஷ் தீவைத்துக்கொண்டார்.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.