தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே ரூ.485 கோடியில் உயர்மட்டச் சாலை – அமைச்சர் எ.வ.வேலு

சென்னை அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 485 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அறிவிப்புகளை வெளியிட்ட அவர், பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் மேம்பாலம் கட்டப்படும் என்றும் சென்னையில் நான்கு இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

கோவை, திருச்செங்கோடு, திருவண்ணாமலை நகருக்கு ஐந்நூறு கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.