ஸ்டாலின், திருமாவளவன் குறித்து அவதூறு – பாஜக முன்னாள் நிர்வாகியை வீடு புகுந்து கைது செய்த போலீசார்.!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டவர்கள் குறித்து அவதூறாக (கூலிபான்கள்) கருத்து பரப்பியதாக, கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் கிழக்கு ஒன்றிய பாஜகவின் முன்னாள் இளைஞரணி பொதுச்செயலாளர் விக்னேஷ் என்பவர், செம்மடை சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். வேலையை உதறி தள்ளிய விக்னேஷ், தற்போது பாஜகவின் உறுப்பினராக மட்டுமே இருந்து வருகிறார்.

இந்த நிலையில், விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குறித்து அவதூறு செய்தியை போய்விட்டதாக, திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த தீபக் சூரியன் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வீட்டில் வைத்து பாஜக முன்னாள் நிர்வாகி விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.