நியூயார்க்கில் சீக்கியர்கள் மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2 சீக்கியர்கள் மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன், நியூயார்க் நகரின் ரிச்மண்ட் ஹில்ஸ் பகுதியில் சீக்கியர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். அதே பகுதியில் இன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மர்ம நபர்கள் சீக்கியர்களை கம்பால் தாக்கி, அவர்களது தலைப்பாகைகளை அகற்றி சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம், காவல்துறையினரை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.