ஆன்லைன் பணமோசடி தொடர்பான வழக்கு.. வெளிமாநிலங்களை சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் 6 பேர் கைது

சென்னையில் கடந்த 15 நாட்களில், பல்வேறு சைபர் குற்றங்களில் ஈடுபட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த 6 பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆன்லைன் பணமோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் தொடர்புடைய வெளிமாநில சைபர் குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து ராஜஸ்தான், பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேடி வந்தனர். இது தொடர்பாக 6 முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.