பீஸ்ட்டாக மாறிய ரசிகர்கள்.. அ.இ.த.வி.ம.இ அமைப்பினர் சாலையை மறித்து அட்டூழியம்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பீஸ்ட் படம் பார்த்த வேகத்தில், கையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் சாலையை மறித்து வாகன ஓட்டிகளை தாக்கியதாக அ.இ.த.வி.ம.இ அமைப்பினர் மீது புகார் எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் அரசு பள்ளி சாலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க கொடியுடன் இரு சக்கரவாகனங்களில் தளபதி கோஷத்துடன் வந்த ரசிகர்கள் அந்தவழியாக சென்ற வாகன ஓட்டிகளை மறித்து ரகளையில் ஈடுபட்டனர்

இரு சக்கரவாகன ஓட்டி ஒருவர் அந்த ரசிகர்களை எச்சரித்த நிலையில் அடங்காத ரசிகர்கள் பீஸ்ட் படம் பார்த்த வேகத்தில் சாலையில் அங்கும் மிங்கும் சுற்றியபடி ஆட்டம் போட்டனர்

இதையடுத்து அந்த அடாவடி ரசிகர்களை வாகன ஓட்டி ஒருவர் செல்போன் கேமரா மூலம் படம் பிடித்தார், அப்படி இருந்தும் சொல் பேச்சு கேளாத அந்த ரசிகர்கள் சாலையில் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்

அந்த அடாவடி கும்பல் குறித்து காவல்துறைக்கு வீடியோ ஆதரத்துடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அடாவடியில் ஈடுபட்ட அ.இ.த.வி.ம.இ அமைப்பினர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.