எஸ்கே 20 பட தயாரிப்பாளர் திடீர் மரணம்… சிவகார்த்திகேயன் இரங்கல்!

தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் நாராயண் தாஸ் நரங். முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார். 1980களில் ஃபினான்ஷியராக தனது கெரியரை தொடங்கினார்.

40 ஆண்டுகளாக 650க்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார் நாராயண் தாஸ் நரங். நாராயண் தாஸ் நரங் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் குழுமத்தின் தலைவராகவும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

நான் முதன் முதலில் உடலுறவு கொண்டது அவருடன் தான்… மனம் திறந்த பிரபல நடிகை!

சமீபத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி நாக சௌர்யாவின் லக்ஷ்யா ஆகியவை படங்களை தயாரித்திருந்தார் நாராயண் தாஸ் நரங். மேலும் நாகார்ஜுனா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் தி கோஸ்ட் திரைப்படம் மற்றும் தனுஷ், சிவகார்த்திகேயனின் பெயரிடப்படாத படங்களும் அவரது வரிசையில் இருந்தன.

நாராயண் தாஸ் நரங், மகன் சுனில் நரங்குடன் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார் நாராயண் தாஸ் நரங். இதையடுத்து ஹைத்ராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாராயண் தாஸ் நரங் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரை பிரபலங்களான மகேஷ் பாபு, சிரஞ்சீவி, நாக சைதன்யா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மொத்த பழியையும் தூக்கி நெல்சன் மேல் போட்ட விஜய்யின் அப்பா… கொதிக்கும் ரசிகாஸ்!

இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், எங்களின் அன்புக்குரிய தயாரிப்பாளர் ஸ்ரீ நாராயண் சிங் தாஸ் மரணமடைந்த தகவலை கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். சுனில் நரங் சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.