தொழுகைக்கு அழைத்த தந்தையை.. கத்தியால் குத்தி கொலை செய்த மகன்.!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தொழுகைக்கு அழைத்த தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வேப்பூர் பகுதியை சேர்ந்த இக்பால் என்பவர் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகியுள்ள நிலையல் கடைசி மகன் இம்ரான் மட்டும் தந்தையுடன் வசித்து வந்தார்.

இம்ரான் தனது அம்மாவின் மறைவிற்குப் பிறகு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இக்பால் தனது மகன் இம்ரானை தொழுகைக்கு செல்ல வருமாறு அழைத்துள்ளார்.

ஏற்கனவே மனக்குழப்பத்தில் இருந்த இம்ரான் கடும் கோபத்தோடு மறுத்துள்ளார். தொடர்ந்து இக்பால் இம்ரான் அணை தொழுகைக்கு செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த இம்ரான் தனது தந்தை வீட்டில் இருந்த கத்தியை கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இக்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் ஆற்காடு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இம்ரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.