பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது புதுமாப்பிள்ளை வெட்டிப்படுகொலை.. திருமணமான 15 நாட்களில் நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது புதுமாப்பிள்ளை வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுமந்த நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் பிரபாகரனுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் தென்றல் என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்நிலையில், நேற்றிரவு ஏர்போர்ட் நகர் பகுதியில் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிரபாகரன் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரபாகரனை சரமாரியாக வெட்டியதோடு, தடுக்க வந்த அவரது நண்பர்கள் இருவரையும் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பிரபாகரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்விரோதம் காரணமாக பிரபாகரன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.