மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி புதுநகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொசஸ்தலை ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.

மழைக் காலங்களில் கொசஸ்தலை ஆறு நிரம்பி கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்த நிலையில், இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் தவிர்க்க சுமார் 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு 51 கோடி ரூபாய் மதிப்பில் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை ஆய்வு செய்த முதலமைச்சர், வடிவுடை அம்மன் நகர் பகுதியில் வசிக்கும் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, 60 அடி சாலை, மணலி எக்ஸ்பிரஸ் சாலை, கண்ணன் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.