சிம்புவின் நடிப்பில் உருவாகும் பத்து தல படத்தின் அப்டேட் வெளியிடு…!

சிம்புவின் ‘
பத்து தல
’ படத்தின் படப்பிடிப்பு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கௌதம் மேனனின்
வெந்து தணிந்தது காடு
படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டார் நடிகர்
சிம்பு
. இதையடுத்து சுரேஷ்
கிருஷ்ணா
இயக்கத்தில் உருவாகும் ‘பத்து தல’ படத்தில் நடிக்கவுள்ளார்.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த
முஃப்தி
படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.இந்த படத்தில் கதாநாயகியாக
பிரியா பவானி சங்கர்
நடித்து வருகிறார். இவர்களுடன் டீஜே
அருணாச்சலம்
, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கணவண் கேட்ட ஒற்றை வார்த்தையால் விவாகரத்து செய்த நடிகை சுகன்யா…!

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு
ஏ.ஆர்.ரகுமான்
இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் சிம்புவின் காட்சிகள் தவிர ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றது.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது அந்த படத்தை சிம்பு முடித்துவிட்டதால் ‘பத்து தல’ படத்தில் விரைவில் இணையவுள்ளராம். கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் துவங்கும் இந்த படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடைபெற உள்ளதாம். இதில் சிம்பு ஒட்டுமொத்த காட்சிகளையும் முடிக்க இயக்குனர் கிருஷ்ணா முடிவு செய்துள்ளராம்.

ஆரம்பத்தில் ஏஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்புக்கு சிறிய அளவிலான காட்சிகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் சிம்பு வரவேற்பு அதிகரித்திருப்பதால் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.