தனுஷுக்கு தான் 'அந்த' கொடுப்பினை கிடைக்கல: ஆனால் ஐஸ்வர்யாவுக்கு..?

சமீப காலத்தில் கோலிவுட் வட்டாரத்திலே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் அது
தனுஷ்
, ஐஸ்வர்யா பிரிவு தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரஸ்பரம் பிரியவுள்ளதாக இருவரும் அறிவித்தனர். பிரிவிற்கு பின்னர் இருவரும் தங்களது பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக தடம் பதிக்கவுள்ளார்.

நான் பாஜக கிடையாது: அந்தர்பல்டி அடித்த இயக்குனர் பாக்யராஜ்..!

இந்நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடினார். அப்போது தனது கெரியர் கேப் பற்றி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா, முதலில் எனக்கு இந்திப் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அதனை நான் தவிர்த்தேன். இப்போது மீண்டும் இந்தி படத்தை இயக்குகிறேன் கூறினார்.

மேலும் அப்பாவை எப்போது இயக்குவீர்கள் என கேட்ட போது, அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை, அப்பாவின் ரசிகையாக நான் இருக்கிறேன். ஆனால் அவரை வைத்துப் படம் இயக்கும் வாய்ப்பு வந்தால் யார் வேண்டாம் என சொல்ல முடியும்? எனத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. ரஜினியை வைத்து படம் இயக்க பெரிதும் ஆசைப்பட்ட தனுஷுக்கு தான் அந்த கொடுப்பினை கிடைக்கல. ஐஸ்வர்யாவுக்காது கிடைக்குமா பார்க்கலாம்? என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பர்ஸ்ட் Half Beast; செகண்ட் Half RRR; வைரலாகும் வீடியோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.