வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் பைக் திருட்டு.. லாவகமாக சைடு லாக்கை உடைத்து பைக்கை திருடிச் சென்ற மர்மநபர்

திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் பைக்கின் சைடு லாக்கை, மர்ம நபர் ஒருவர் லாவகமாக உடைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன், வழக்கம் போல் அவரது பல்சர் பைக்கை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த நிலையில் அதனை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கண்ணனுக்கு சொந்தமான லாரியில் இருந்து பேட்டரி திருடி போனதாக கூறப்படும் நிலையில், தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.