எல்லை தாண்ட தயங்க மாட்டோம்: பயங்கரவாதிகளுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கவுகாத்தி: இந்தியாவை அச்சுறுத்தினால், பயங்கரவாதிகளுக்கு எதிராக எல்லை தாண்டி வந்து நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் நடந்த விழாவில் ராஜ்நாத் பேசியதாவது: பயங்கரவாதத்தை கடுமையாக கையாளுவோம் என்ற செய்தியை இந்தியா அனுப்பி உள்ளது. வெளியில் இருந்து நாட்டை அச்சுறுத்தினால், எல்லை தாண்ட தயங்க மாட்டோம்.

latest tamil news

வங்கதேசம் போன்ற நட்பு நாடு காரணமாக, மேற்கு எல்லையை காட்டிலும், கிழக்கு எல்லை தற்போது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் நிலவுகிறது. இங்கு, ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், அமைதி நிலவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.