கோவில் திருவிழாவில் பெண் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து.!

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த சுத்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் திடீரென கத்தியால் அவரை குத்தியதாக கூறப்படுகிறது.

மார்க்ரெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்ப முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர் பெயர் ஆறுமுகம் என்பதும், முன்னர் ஒருமுறை மது போதையில் இருந்ததால் வழக்கு பதிந்த பெண் ஆய்வாளரை பழிவாங்க கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.