பாக்.,கிற்கு படிக்க செல்ல வேண்டாம்: யு.சி.ஜி.,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-‘வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், பாகிஸ்தான் சென்று படிப்பதை தவிர்க்க வேண்டும்’ என, பல்கலைக்கழக மானிய குழுவும், அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும் அறிவுறுத்தி உள்ளன

latest tamil news

.நம் நாட்டில் உள்ள இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிப்பதில், அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானிய குழுவும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும் சேர்ந்து, நேற்று இந்திய மாணவர்களுக்காக, ஒரு அறிவிப்பை வெளியிட்டன.

latest tamil news

அதன் விபரம்:உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் யாரும், பாகிஸ்தானுக்கு சென்று படிக்க வேண்டாம். அப்படி பாக்., பல்கலைகளில் படித்து பட்டம் பெறுவோர், இந்தியாவில் உயர்கல்வி கற்கவோ அல்லது வேலை பெறவோ இயலாது. எனினும், பாகிஸ்தானில் பட்டம் முடித்து, இந்தியாவில் குடியுரிமை பெற்று தஞ்சமடைவோருக்கு மட்டும், இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு இங்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.