ஓகே மட்டும் சொல்லிடாதீங்க, சோழி முடிஞ்சுடும்: பதறும் தனுஷ் ரசிகர்கள்

பீஸ்ட் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தை இயக்கவிருக்கிறார்
நெல்சன் திலீப்குமார்
. அவர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படத்தை பார்த்தவர்கள் நெல்சனை விளாசினார்கள்.

பீஸ்ட் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததற்கு காரணம் நெல்சன் தான் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூட தெரிவித்தார்.

இதை எல்லாம் பார்த்தும் கூட நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. இந்நிலையில் ரஜினியை அடுத்து தனுஷை வைத்து படம் இயக்க முடிவு செய்திருக்கிறாராம் நெல்சன் திலீப்குமார்.

தனுஷை சந்தித்து ஒரு வரியில் கதை சொல்லியிருக்கிறாராம் நெல்சன். ஆனால் ஏற்கனவே கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் நெல்சனுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாராம்
தனுஷ்
.

இது குறித்து அறிந்த ரசிகர்களோ, அண்ணா, நெல்சன் படம் வேண்டாம். அவர் விஜய்யை வைத்து சொதப்பியதை பார்த்திருப்பீர்கள். அதனால் இந்த நேரத்தில் நெல்சன் படத்தில் நடித்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்கிறார்கள்.

தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush:தனுஷ் மீது விழுந்த ‘பெரிய’ இடத்து பார்வை: ரசிகர்கள் செம ஹேப்பி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.