சரவணா ஸ்டோர் நகைக்கடைலிருந்து 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடி அடகு வைத்த ஊழியர் கைது.!

சென்னையில், ஆடம்பர செலவு செய்வதற்காக வாங்கிய கடனை அடைக்க, சரவணா ஸ்டோர் எலைட் நகைக்கடையில் இருந்து சிறுக சிறுக 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடி அடகு வைத்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

தியாகராய நகரில் உள்ள அந்த நகைக்கடையில் நெல்லையைச் சேர்ந்த ஐசக் சாமுவேல் என்ற இளைஞர், ஆன்லைன் புக்கிங் மற்றும் டெலிவரி பிரிவு பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த மாதம் நகைக்கடையில் நடைபெற்ற தணிக்கையின் போது, 625 கிராம் நகை குறைவாக இருந்தது தெரியவந்தது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், ஐசக் சாமுவேல் கைவரிசை காட்டியது அம்பலமானதை அடுத்து, கடை மேலாளர் போலீசில் புகாரளித்தார்.

இதனையடுத்து ஐசக் சாமுவேலை பிடித்து போலீசார் விசாரித்தில், எடை குறைவாக இருக்கும் நகைகளை அதிக எடை இருப்பதாக போலி கணக்கு எழுதி, நகைகளை சிறுக சிறுக திருடியதாக தெரிவித்துள்ளார். 

சிறு வயதில் இருந்தே ஆடம்பரமாக செலவுசெய்து பழக்கப்பட்ட ஐசக், கொரோனா ஊரடங்கு காலத்தில் கடன் வாங்கி ஆடம்பரமாக செலவும் செய்ததாகவும் அந்த கடனை அடைக்க நகைகளை திருடியதாகவும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, ஐசக் சாமுவேல் அடமானம் வைத்த 80 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.