நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதலில் சிக்கல்: பயில்வான் சொன்னது நடந்துடுமோ?

நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போதில் இருந்தே விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. தங்களுக்கு நிச்சயதார்த்தம் கூட நடந்துவிட்டதாக
நயன்தாரா
கூறினார்.

இருப்பினும் திருமணம் பற்றி இதுவரை பேசவில்லை. நயன்தாரா கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அதனால் தற்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் சமீபத்திய நடவடிக்கைகள் நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக நயன்தாரா, விக்னேஷ் சிவனின் காதல் ஓராண்டுக்குள் முறிந்துவிடும் என்று நடிகரும், பத்திரிகையாளருமான
பயில்வான் ரங்கநாதன்
கடந்த ஆண்டு தெரிவித்தார். அவர் தெரிவித்தது போன்று நடந்துவிடுமோ என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.

இதற்கிடையே
விக்னேஷ் சிவன்
இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

அந்த படத்திற்கு போதிய விளம்பரம் செய்யவில்லை என்பது ரசிகர்களின் மனவருத்தம். தான் தயாரித்து, நடித்திருக்கும் படத்தையே நயன்தாரா ஏன் விளம்பரம் செய்யவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஓகே மட்டும் சொல்லிடாதீங்க, சோழி முடிஞ்சுடும்: பதறும் தனுஷ் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.