பாக்., வீரர்கள் மூவர் உயிரிழப்பு| Dinamalar

இஸ்லாமாபாத் : நம் அண்டை நாடான பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள தேவாககர் கிராமம் அருகே ஆப்கானிஸ்தான் எல்லை அமைந்துள்ளது. இந்நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் நேற்று, எல்லையை தாண்டி வந்து பாக்., ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாக்., ராணுவமும் திருப்பித் தாக்கியது. இச்சண்டையில் பாக்., ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இம்மாகாணத்தில் ஆப்கன் பயங்கரவாதிகள் அடிக்கடி எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் தாக்குதல் அதிகரித்து உள்ளதாகவும் பாக்., ராணுவத்தினர் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.